Thursday, May 29, 2008

த.த.ஜ. தலைவர் பி.ஜெ.யால் கைவிடப்பட்ட முஸ்தபா ரசாதி ஜனாஸா.

த.த.ஜ. தலைவர் பி.ஜெ.யால் கைவிடப்பட்ட முஸ்தபா ரசாதி ஜனாஸா.

தீவிரவாதத்தை தூண்டி குளிர் காய்ந்த மறுமைக்கஞ்சா மாவீரர் த.த.ஜ. தலைவர் பி.ஜெ.யால் கைவிடப்பட்ட முஸ்தபா ரசாதி உடல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tuesday, May 27, 2008

தவ்ஹீத் வியாபாரி

திருவாளர் பிஜே சில நினைவூட்டல்கள்:

- மார்க்க கல்விக்காக மதரஸாவில் சேர்ந்தும், மார்க்கத்தை விளங்கிக் கொள்ள முடியாமல் மளிகை கடையில் பொட்டலம் மடித்துக் கொண்டிருந்தவர்.
- வாழ்வியல் தேவைக்காக அரசியல் கட்சி மேடைகளில் மேடைப் பேச்சாளராக அறிமுகம் ஆனவர்.
- திராவிடர் கழக கொள்கையை ஏற்று இறை மறுப்பாளராக வலம் வந்தவர்.

இவ்வாறெல்லாம் இருந்தவர் தான் அல்லாஹ்வின் பேரருளால் 1980 களில் மதீனா சென்று கற்றுத் தேர்ந்த அறிஞர்களின் போதனையை ஏற்று இஸ்லாத்தின் கொள்கைகளின் பால் மீண்டு வந்தார்.

இங்கே, அன்னாரின் அடிப்பொடிகளால் ஒரு வினா தொடுக்கப்படலாம்.

அதாவது, 1980 களுக்கு முன் என்ன விதமான கொள்கையில் இருந்தாலும், 1980 களில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்குப் பிறகு ஏகத்துவத்தை முன்னெடுத்து சென்றவர் இவர் இல்லையா – என்று வினா எழுப்பலாம்.

அவர்கள் எடுத்து வைக்கும் தர்க்கமே அவர்களுக்கு போதுமான பதில் என்பதனைக்கூட உணர முடியாத அளவிற்கு தக்லீத் முற்றியவர்கள் என்பதால், நாமே விளக்க கடமைப்பட்டுள்ளோம். விளங்கிக் கொள்வதும், விளங்கிக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

அதாவது, இவர்களின் கூற்றுப்படி எந்த ஒரு மனிதனும், ஒரே நிலையில் இருக்க வேண்டியதில்லை. சமய சந்தர்ப்பம், அறிவு பொருளாதாரத்திற்கு ஏற்ப அவனுடைய நிலை மாறுபாடு அடையலாம். இதற்கு இவர்களது கதாநாயகனே மகச்சிறந்த எடுத்துக்காட்டு. 1980 களுக்கு முன்னால் இறை நிராகரிப்பு கொள்கையிலிருந்து 1980 களில் ஏகத்துவத்தால் ஈர்க்கப்பட்டு தனது நிலையை மாற்றிக் கொண்டதோடு, பலர் தங்களுடைய நிலைகளை மாற்றிக் கொள்ள காரணமாக இருந்தார் என இவரால் புகழாரம் சூட்டப்படுபவர்.

இதே அடிப்படையில் அமைந்த நமது கேள்வி என்னவெனில், 1980 களில் மாற்றங்களுக்கு வித்திட்டவர் அதற்கு பிறகு மாறவில்லை என்று எந்த தவ்ஹீதுவாதியாவது நெஞ்சில் கை வைத்து ???! செல்ல முடியுமா.

நிச்சயமாக ஒருவரும் சொல்ல முடியாது. அவ்வாறு சொல்பவர் எவரும் தவ்ஹீதுவாதியாக கூட இல்லை, சராசரி முஸ்லீமாகக் கூட இருக்க முடியாது.

ஏனெனில், 1980 களில் பலரின் தியாகத்தால் வளர்ந்த தவ்ஹீதை இன்று தனது லிமிடெட் கம்பெனியின் மூலதனமாக்கிக் கொண்டவர் தான் இவர்கள் ஏற்றிப் போற்றி புகழ்பாடும் ஆலிம் என்ற பெயரில் உலவி வரும் அபூஜெஹ்லின் வாரிசு.

மார்க்கத்திற்காக பல தியாகங்கள் செய்து, உலகமெங்கும் ஏகத்துவ ஒளி பரப்பிய அறிஞர்களை, லூசு என்றும், குருடன் என்றும் தரம் தாழ்ந்து விமர்சித்த மனநோயாளி.

இன்னும் ஒருபடி மேலே போய், உத்தம சத்திய ஸஹாபாக்களை கிரிமினல் என்றும், திருடன் என்றும் கொலைகாரன் என்றும் நா கூசாமல் விமர்சித்த சுயநலவாதி.

இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றான ஜகாத்தை மறுத்த சந்தர்ப்பவாதி.

இஸ்லாமிய நம்பிக்கைகளில் ஒன்றான சுவர்க்கம் நரகத்தைப் பற்றி – அவைகள் படைக்கப்பட வில்லை என்று தர்க்கம் புரியும் குழப்பவாதி.

குர்ஆன் தர்ஜமா என்ற பெயரில் அல்லாஹ்வின் வார்த்தைகளை அப்புறப்படுத்த முயன்ற குழப்பவாதி.

சுயநலத்திற்காக பல அமைப்புகளை உடைத்து வெளியேறி இன்று தவ்ஹீதின் பெயரை பிராண்ட் நேம் ஆக வைத்து தொழில் நடத்தி வரும் தவ்ஹீத் வியாபாரி.

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களைக் கொண்டே மார்க்கப் பிரச்சாரம் ???! நடத்தி வரும் ஒரிஜினல் அரசியல்வாதி.

பல பொய்களையும், அவதூறுகளையும் மறுமை பற்றிய அச்சமில்லாமல் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கும் இவர் யார் - என்று,



தரணியெங்கும் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்களிடத்தில் கேட்டால்,

நெஞ்சிலோ, தலையிலோ, வயிற்றிலோ கைவைக்காமல் தாமதமின்றி சொல்லி விடுவார்கள்

மேற்குறிப்பிட்ட அனைத்து தகுதிகளை (??!!) யும் ஒருங்கே பெற்று,
ஆன்மீகத்தின் பெயரால் அரசியல் நடத்தி வரும் திருவாளர் பிஜே தான் என்று தயங்காமல் சொல்லி விடுவார்கள்.


வல்ல அல்லாஹ் இந்த சமுதாயத்தை ஷைத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்பானாக.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 12.05.2008

மார்க்கத்தை விற்கும் மனநோயாளி!

மூஸா முபாரக் அலி, சென்னை -1

கேள்வி: களவாடப்பட்ட பத்திரிகையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் தமுமுகவினர் பதில் அளிக்க இயலவில்லை என்று ஒருவர் சொன்னதுடன், தனிப்பட்ட முறையில் தமுமுக தலைமையைப் பொதுக்கூட்டத்திலும் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதனை அவர்கள் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ஒளிபரப்பியுள்ளார்கள். தமுமுக ஏன் இன்னும் இதற்கு பதில் அளிக்காமல் மவுனம் சாதிக்கிறது.?

பதில்: பொதுக்கூட்டத்தில் மட்டும் அல்ல, தொலைக்காட்சியிலும் பகற்கொள்ளை அடிக்கப்பட்ட பத்திரிகையிலும் தாதா கலாச்சாரத்தைப் பின்பற்றும் அவர் தமுமுக மீது அவதூறுகளை சுமத்தித் தமுமுகவிற்கு நன்மை சேர்த்து வருகிறார். அவரது பேச்சையும் எழுத்தையும் இப்போதெல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு மன நோயாளியின் முனகலாகவே அதனைப் பெரும்பாலும் மக்கள் கருதுகிறார்கள்.

3 மாதத்தில் தமுமுகவை அழித்துக் காட்டுவேன் என்று சபதம் செய்தவருக்கு இன்று தமுமுக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து ஊர்களிலும், அனைத்து தரப்பினர் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து விட்டதைப் பார்த்துப் பொறுக்க இயலாமல் ஒரு மனநோயாளி போல் உளறிக் கொட்டுகிறார். பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்ட பணம், தவ்ஹீத் பிரச்சாரம் செய்கிறோம் என்ற பெயரில் திரட்டப்பட்ட பணம் இறைவன் கூறுவது போல் (திருக்குர்ஆன் 49:12) சொந்த சகோதரர்களின் மாமிசத்தை உண்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இறைவனிடம் வெகுமதி பெறும் நோக்கில் இந்தப் பேச்சு வியாபாரிக்கு நன்கொடை அளிக்கும் சகோதரர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், நன்மைக்குப் பதில் பாவச் சுமையை தூக்குவதற்கு உங்கள் பணம் பயன்படுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று தமுமுக நாம் குறிப்பிட்டது போல் அனைத்துத் தரப்பு மக்கள் உள்ளத்தில் நீக்கமற நிறைந்து விட்டது. மக்கள் பல வகையில் தங்கள் பாதுகாப்பு பேரியக்கமான தமுமுகவிற்கு தங்கள் அன்பைக் காட்டி வருகின்றார்கள். பெரும் தொழில் அதிபர்கள் முதல் சாதாரண சாமானிய மக்கள் வரை தமுமுகவிற்குத் தங்கள் அன்பை, ஆதரவை நல்கி வருகின்றார்கள்.

நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசிடம் எடுத்து உரைத்து அதனை நாம் எவ்வித பிரதி உபகாரமுமின்றி நிறை வேற்றி வருகிறோம். நமது சமுதாயத்தைச் சேர்ந்த பல அரசு ஊழியர்களின் நியாயமான பிரச்சனையையும் எவ்வித பிரதி உபகாரமுமின்றி தீர்த்துவைத்து வருகிறோம். இவற்றில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை. மனநோயாளி குறிப்பிட்டதுபோல் பரங்கிப்பேட்டையிலும் எந்தவொரு ரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் ஒரு தலைசிறந்த மருத்துவர் இந்தச் சமுதாயம் பயன்பெறுவதற்காகப் பல்வேறு கல்வி நிறுவனங்களை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தனது சொந்த ஊரான பரங்கிப்பேட்டையில் நடத்தி வருகிறார்.

தமுமுக தலைவர் 22 ஆண்டு காலம் அனுபவம் பெற்ற ஒரு கல்வியாளர். அதாவது அந்த மனநோயாளி பேச்சாளரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வாத்தியார். ஆம் கண்ணியமான தொழில் என்று போற்றப்படுகின்ற கல்வியைப் பிறருக்குப் போதிக்கும் வாத்தியார் தொழில் செய்து வருபவர். ஏன் இந்த மனநோயாளி கூட ஒருகாலத்தில் வாத்தியாராக இருந்தவர் தான்.. தமுமுக தலைவர் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளச் சென்றபோது தனது பள்ளிக்கூடம், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, செவிலியர் பள்ளி போன்றவற்றைப் பார்க்க வருமாறு ஆஸ்திரேலிய டாக்டர் அழைப்பு விடுத்தார். ஒரு கல்வியாளர் என்ற முறையில் தனது கல்வி நிலையங்களைப் பார்வையிடவும், ஆலோசனைகளைப் பெறவும் ஆஸ்திரேலிய டாக்டர் தமுமுக தலைவரை அழைத்திருந்தார். இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது கடலூர் மாவட்டத் தலைவர் ஜின்னாவிடம் இந்த அழைப்பை ஏற்கலாமா என்று ஆலோசனைக் கேட்டு அவர் ஒப்புதல் அளித்த பிறகுதான் தமுமுக தலைவர் அங்கு சென்றார். தமுமுக தலைவர் ரகசியமாக அங்கு செல்ல வில்லை. அவருடன் கடலூர் மாவட்டத் தலைவர் ஜின்னா தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும் சென்றனர். பூட்டிய அறையில் மன நோயாளி பிரமுகர் உளறி வருவதுபோல் எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெற வில்லை. பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் தலைவர் யூனுஸ் உட்பட தமுமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் பேசினார்கள் விருந்து சாப்பிட்டார்கள். இதனைக் குற்றம் என்று சொல்பவரை மனநோயாளி என்றுதானே சொல்ல வேண்டும்.

வக்ஃப் நிலம் எதுவும் தாரை வார்க்கப் படவில்லை என்பதை வக்ஃப் ஆவணங்களே பதில் சொல்லும். பரங்கிப்பேட்டை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, இன்று தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் தமுமுக தலைவர் அழைக்கப்பட்டுச் சென்று வருகிறார். மனநோயாளி பிரமுகர் வசதிக்காக அதனை இங்கே பட்டியலிடுகிறோம்.

கடந்த இரண்டு மாத இடைவெüயில் சென்னை புதுக்கல்லூரி நிர்வாகமும் ஆசிரியர் சங்கமும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமுமுக தலைவரை அழைத்தார்கள். தமுமுக தலைவர் சென்று வந்தார். பிறகு ஒரு நாள் ஆசிரியர் சங்கம் தனியாகத் தங்கள் சங்க மாடத்திற்கு அழைத்து தமுமுக தலைவருடன் நமது கல்லூரிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துக் கலந்துரையாடினார்கள். அவருக்கு விருந்தும் அளித்தார்கள்.

குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1981 முதல் இயங்கி வரும் முஸ்லிம் கலைக் கல்லூரி நிர்வாகம் தமுமுக தலைவரை அழைத்து, கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் ஜும்ஆ உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதன் பிறகு தமுமுக தலைவருக்கும் குமரி மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கும் விருந்தும் அளித்தார்கள். இதன் பிறகு இக்கல்லூரி வளாகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பி.எட். கல்லூரியை தமுமுக தலைவர் தொடங்கி வைத்தார். திருவிதாங்கோடு இஸ்லாமிய மாதிரிப் பள்ளி நிர்வாகிகள் தங்கள் பள்ளிக்கு தமுமுக தலைவரை அழைத்துச் சென்று தங்கள் நிறுவனத்தைப் பார்வையிட வைத்து ஆலோசனைகளைப் பெற்றனர். பிறகு அப்பள்ளிக்கூடத்தின் ஆண்டு விழாவில் தமுமுக தலைவர் உரையாற்றினார்.

சேலத்திற்கு சமீபத்தில் தமுமுக தலைவர் சென்றிருந்த போது கே.வி. ஹாஜியார், தான் நடத்தும் கல்வி நிறுவனங்கள் குறித்து தமுமுக தலைவரிடம் எடுத்துரைத்தார், சேலத்தில் இயங்கும் தாருல்சலாம் பள்ளி நிர்வாகி கள் தமுமுக தலைவரைத் தங்கள் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனைகளைப் பெற்றார்கள்.

மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி நிர்வாகமும் தமுமுக தலைவரை சீரத்துன் நபி சிறப்புரை ஆற்ற அழைத்தது. அப்போது அந்த கல்லூரி நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நிறுவனமான பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் தமுமுக தலைவரிடம் கல்வி தொடர்பான பல ஆலோசனைகளைச் செய்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லூரி தமுமுக தலைவரை அழைத்து வட்டியில்லா வங்கி குறித்து வணிகவியல் துறை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்த சந்தர்ப்பத்தில் கல்லூரியை சுற்றிக்காட்டிப் பல ஆலோசனைகளை அக்கல்லூரி நிர்வாகம் தமுமுக தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டது. தேநீர் விருந்து அளித்தார்கள். இதுமட்டுமின்றி அதே டிசம்பர் மாதம் வேலூரில் உள்ள புகழ்பெற்ற ஆக்சிலியம் கல்லூரியில் மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற நாடு தழுவிய கருத்தரங்கத்தில் இஸ்லாமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் தமுமுக தலைவர் உரையாற்றினார். வேலூர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் வந்தனர். அக்கல்லூரியிலும் தேநீர் விருந்து தமுமுக நிர்வாகிகளுக்கு அளிக்கப்பட்டது.

விரைவில் இன்ஷாஅல்லாஹ் சென்னை பல்கலைக்கழகத்தில் வட்டியில்லா வங்கிகள் குறித்த தனது ஆய்விற்காக டாக்டர் பட்டம் பெறவுள்ள தமுமுக தலைவர் தன்னை வாத்தியார் என்று அழைத்துக் கொள்வதைச் சிறப்புக்குரிய தகுதியாகவே கருதுகிறார். எம்.பி.ஏ. படித்தவர்கள் வணிக நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வது இயல்பாக இருந்த காலக்கட்டத்தில் தானே விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழில் இந்த வாத்தியார் தொழில் என்பதை அறிந்தவர்கள் புரிந்தவர்கள் விளங்கிக் கொள்வார்கள். அந்தத் தொழிலை இளக்காரமாக விமர்சிப்பது அவர்கள் உள்ளத்தில் நிரம்பி வழியும் பொறாமையையும் வஞ்சக உணர்வையும் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

விருந்துக்கு அழைத்தால் செல்ல வேண்டும் என்பது தான் நபிவழி. யூதர்கள் அழைத்த விருந்திலும் நபிகள் நாயகம் (ஸல்) பங்குகொண்டார்கள். இதனைக் கொச்சைப்படுத்திப் பேசும் இவர்கள் உண்மையான தவ்ஹீத்வாதிகளா?

ஈரோட்டில் நமது சமுதாயத்தவர்கள் நடத்தும் தோல் தொழிற்சாலைகளுக்கு அதிகார வர்க்கம் தேவையில்லாத தொல்லைகளை அளித்து வந்தனர். இதனை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவரும் ஒரு உயர் அதிகாரியின் தலைமையில் இப்பிரச்சனையை ஆய்வுசெய்து நமது மக்களின் நலன் பாதுகாக்கப்பட வழிவகைச் செய்தார். எவ்வித பிரதி உபகாரமுமின்றி நாம் செய்த இந்த உதவியைக் குற்றம் என்று பேசுபவர் மனநோயாளியாகத் தானே இருக்க இயலும்.

இன்று தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயற்பாடுகள் திறந்த புத்தகமாக ஆக்கப்பட்டுள்ளது. ஈ-கவர்னன்ஸ் என்று சொல்லப்படும் மின் நிர்வாக முறை தமுமுக பொதுச் செயலாளர் தலைமையில் வக்ஃப் வாரியத்தில் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு வருகிறது. வக்ஃப் வாரியத்தின் நிலத்தின் ஒரு அடி கூட சட்டத்திற்கு புறம்பாகப் பயன்பட அனுமதிக்கப்படவில்லை. முந்தைய காலங்களைவிட தற்போது வக்ஃப் வாரியத்தின் நிர்வாகம் தமுமுக பொதுச் செயலாளர் தலைமையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஜமாஅத் நிர்வாகிகளே சான்று வழங்குவார்கள். கடந்தகால நிர்வாகச் சீர்கேடுகளை யெல்லாம் சரிப்படுத்த ஓர் ஆண்டு காலம் பிடித்துள்ளது. இனி மேலும் சிறப்பாக வக்ப் வாரியம் இயங்க உள்ளது. இவ்வாறு வக்ப் நிர்வாகத்தில் சிறந்த முறையில் செல்வதைப் பார்த்து மனம்போன போக்கில் பேசினால் அதனைப் பைத்தியக்காரனின் முனகல் என்று தான் குறிப்பிட முடியும்.

தமுமுகவின் சமுதாயப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இரண்டு அவசர சிகிச்சை ஊர்திகளை அளித்தது போல் நமது சமுதாயப் பிரமுகர்களும் கார்களையும், ஏன் விமானங்களையும் கூடத் தமுமுகவிற்கு இன்ஷாஅல்லாஹ் வழங்குவார்கள். இதனைக் குற்றம் என்று பேசுபவரை மனநோயாளி என்றுதானே குறிப்பிட வேண்டும். தமுமுக பொதுச் செயலாளர் செய்துவரும் தொழிலையும் கொச்சைப்படுத்தியுள்ளார் அந்த மன நோயாளி. ஆனால் தமுமுக பொதுச் செயலாளர் ஹலாலான வியாபாரத்தை செய்துவருகிறார். ஆனால் மனநோயாளியோ, தான் மார்க்கத்தைக் காட்டி பிழைப்பு நடத்தவில்லை என்று நெஞ்சு நிமிர்த்தி கூற முடியுமா?

ஊர்தோறும் இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறோம் என்ற சாக்கில், தான் எழுதிய புத்தகங்களை - குர்ஆன் தமிழாக்கத்தை நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்படும் அனைவருக்கும் இலவசமாகத் தருகிறேன் என நிகழ்ச்சி நடத்துபவர்களிடமும் - வெளிநாட்டில் உள்ளவர்களிடமும் கட்டாய வசூல் செய்து பணம் சம்பாதிப்பது - இதில் வேதனையானது என்னவெனில் பாதி புத்தகங்களை வினியோகித்துவிட்டு, மீதியை மீண்டும் கடைசரக்கு ஆக்குவது, தான் நடத்தும் அமைப்பின் சார்பாக வெளியிடப்படும் துண்டுப் பிரசுரம் முதல் எல்லாவகையான அச்சு வேலைகளையும் தனது மனைவியின் தம்பியிடம் மட்டுமே தந்து மைத்துனர்களுக்கும் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்.

தொலைக்காட்சியில் முதலீடு செய்வதற்காக மக்கள் பணத்தைத் திரட்டி, போட்ட முதலை விட மும்மடங்கு அதிகத் தொகையை வெற்றி தொலைக் காட்சியின் அதிபர் தெய்வ முதல்வனை மிரட்டி உருட்டி வாங்கிக்கொண்டு முதலீடு செய்த ரசிகர் கூட்டத்திற்கு அற்பசொற்பத்தைக் கொடுத்து ஏமாற்றிய நூதன ஏமாற்றுக் காரர்களின் சிதம்பர ரகசியம் இன்னும் பல உண்டு.

இந்த அளவிற்கு அந்த அப்நார்மல் மனிதனின் உளறல்களுக்கு பதிலளிக்க பக்கத்தை வீணாக்கியதற்காக வருந்து கிறோம். எனவே அந்த அப்நார்மல் மனிதர் நம்மை ஏசினால், நாம் மக்கள் உள்ளத்தில் அதிகமாக இடம்பிடித்து விட்டோம் என்று பொருள். அதேசமயம் அவர் மவுனமாக இருந்துவிட்டாலோ நாம் பலவீனமடைந்து விட்டோம் என்று அர்த்தம்.

நன்றி: தமுமுக இணையதளம்

வேடாதாரிகளை இனம் காண்போம்

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் - 28

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

வ அலைக்கு முஸ்ஸலாம், வாங்க ஒமர் பாய். எங்க வல்லத்துல இருந்தா வர்றீங்க.

என்ன அஹமது? கிண்டல் பண்றீங்களா. வல்லம் மாநாடு தான் கால வாரி விட்டுடுச்சே. மொத நாளு வெளியான கூட்டத்தோடயே நான் ஓடி வந்துட்டேன்.

அப்போ ஏகப்பட்ட கூட்டம் வந்துடுச்சோ.

அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்ல. வந்த கூட்டமே மொத்தம் 40 இல இருந்து 50 ஆயிரம் தான் தேறும். அதுக்கே ஒழுங்கான வசதி செஞ்சு குடுக்காததுனால பல பேரு ஏந்தான் வந்தோமோன்ட்டு வருத்தத்தோட திரும்பி போயிட்டாங்க.

அப்போ.. .. 10 இலட்சம் பேரு கூடப்போறாங்க. 100 ஏக்கர்ல ISO (ஐஎஸ்ஓ) தரத்தோட பல ஏற்பாடுகள்ன்னு சொன்னாங்களே.

என்ன அஹமது தெரியாத மாதிரி கேக்குறீங்களே. பில்ட் அப் பண்றதுங்குறது நம்மாளு பிஜே ரத்தத்துலயே ஊறுனதாச்சே. தவிர ஒண்ண, பத்தா சொல்றது தன்னோட வளமைதான்னு சமீபத்துல WIN TV லயே அவரு சொன்னாரே மறந்துட்டீங்களா.

நாந்தான் அந்த கூத்தெல்லாம் பாக்குறதில்லைன்னு பல முற சொல்லிட்டேனே. சரி சரி நீங்க வல்லத்தப் பத்தி சொல்லுங்க.

கிட்டத்தட்ட 6 மாச காலமா, டிவில வளரும் சினிமா ரேஞ்சுக்கு ஒவ்வொரு நாளும் இதோ புல்டோசர் தரையை சமன் செய்கிறது. இதப் பாத்தீங்களா, சுத்தி மறைக்கிறதுக்கு ஷீட்டு வந்து ஏறங்குது. இதோ இப்போ பாக்குறீங்களே இது தான் ஷெட் போடுறதுக்கான தளவாட சாமான்கள். அப்புடி இப்புடின்னு தெனந்தோறும் ஒவ்வொரு ஸ்நாப் ஆ காமிச்சு என்னவோ அந்த எடத்த அப்புடியே ஒரு அவசர கால கேம்ப் ரேஞ்சுக்கு சொன்னாங்க. ஆனா ஒண்ணுமே செய்யல.

ஐயய்யோ. அப்புடீன்னா மக்கள் ரொம்ப செரமப்பட்டிருப்பாங்களே.

அதுனால தான் திருவிழா பாக்கன்னு வந்த கூட்டம் திரும்பிப் பாக்காம ஓடிடுச்சு. ஏகத்துவ பிரச்சாரத்த எல்லாம் பின்னால தள்ளிட்டு, எலும்பு கூடு பேசுது ஐயா வாங்க, அம்மா வாங்கன்னு சித்திர திருவிழா ரேஞ்சுக்கு கூப்பாடு போட்டாங்க. அத நம்பி திருவிழா வேடிக்கையைப் பாக்கலாம்னு வந்த கொஞ்ச நெஞ்ச பேரும் அடிக்கிற வெயிலுக்கு முகத்த கழுவக்கூட தண்ணி கெடக்ய்காம தள்ளாடிப் போயிட்டாங்க.

இருந்தாலும் பந்தல்ல கூட்டமா இருந்துச்சுன்னு கேள்விப்பட்டேனே.

வேற வந்த சனங்க இந்த வெயிலுல எங்க போயி நிப்பாங்க. அந்த கூட்டத்துலயும் அதிகமான பேரு தமுமுக காரனுவளாத்தான் தெரிஞ்சானுங்க. விசாரிச்சதுல என்ன இருந்தாலும் தவ்ஹீது மாநாடுன்னு சொல்லியிருக்காங்களே. ஷைத்தானே சொன்னாலும், ஆயத்துல் குர்ஸியோடய மகிமைய புறந்தள்ளாம ஏத்துக்கிட்டு இருக்குற நாம, பாகுபாடு பாக்காம மார்க்க பிரச்சாரங்கள்ல்ல கலந்துக்கத்தானே செய்வோம்னு சொல்லி ஆச்சரியப்பட வச்சுட்டாங்க.

இட ஒதுக்கீடுன்னு சொல்லி கும்பகோணத்துல கூட்டத்த சேர்த்து, கடைசில ஜெயாகிட்ட போயி கோனிகா பஷீருக்கு சீட்டு கேட்டு நின்னாப்ல, இப்போ தவ்ஹீது பேர்ல கூட்டத்த கூட்டி யாருகிட்ட போயி நிக்கப் போறாரோ.

அது தனியான அக்கப்போர் தான் போங்க. அதுக்கு அதுக்கு முன்னால இந்த தவ்ஹீதுங்குறத இவங்க எப்புடியெல்லாம் வித்து காசாக்குறாங்கன்னு கேளுங்க.
அதோட சேர்த்து ஓடாத குர்ஆன் CD யை குடுத்து காசு பாத்துட்டாங்களாமே.



சொல்றேன் அஹமது. விளக்கமா ஒன்னொன்னா சொல்றேன். பொறுமையா கேளுங்க. முதல்ல தமிழகத்தில் தவ்ஹீதின் வரலாறுன்னு, சுட்டுக்கிட்டு வந்த பத்திரிக்கைல ஒரு இஸ்ஸு முழுக்க எழுதியிருக்காங்க.

அதுல என்னங்க தப்பு கண்டுபுடிச்சீங்க. ஒரு வரலாறை அடுத்த தலைமுறைக்கு சொல்றது தப்பா.

அப்புடி இல்ல அஹமது. முஸ்லிம்களோட வரலாத்த சங்பரிவாரம் மாத்தி எழுதுதுன்னு சொல்லிட்டு, முஸ்லிம்களோட அடிப்படை அறிவான தவ்ஹீத் பத்துன கட்டுரைய முஸ்லிம்களே மாத்தி எழுதலாமா.

விரிவா சொல்லுங்க ஒமர் பாய்.

அஹமது, 1980 கள்ல்ல, மதீனாவுல இருந்து திரும்பி வந்த சில அறிஞர்களோட கடும் முயற்சியால தான் தமிழகத்துல தவ்ஹீத் பிரச்சாரம் தளிர்விட்டதுங்குறது தவ்ஹீத்வாதிகள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் நம்ம தலைவரோட அந்த பழைய முன்னோடிகள் யாரும் இல்லங்குறதுனால, இப்போ கெடச்சுருக்குற புதிய ரசிகர்கள்கிட்ட தன்ன ஒரு ஹீரோ, தியாகி ரேஞ்சுக்கு காட்டிக்கிறதுக்காக, அவுங்கள எல்லாம் தடம் மாறிட்டாங்கன்னு கூசாம எளுதியிருக்காருங்க.

அடப்பாவமே. அப்போ இவரோட இல்லன்னா, அவுங்க கொள்கையே மாறிப்போச்சுன்னு இவரு சொல்றாரோ.

அதவிட தமாசு என்னான்னா, மவுத்தாப்போன ஒண்ணு ரெண்டு பேரு மட்டும் கொள்கைல உறுதியா இருந்து மரணிச்சுட்டதா எளுதியிருக்காங்க. அதுபடி பாத்தா, மவுத்தாப் போனா மட்டும் தான் கொள்கைல உறுதின்னு ஒத்துகிடுவாங்க போல.

வேற என்ன எளுதியிருக்காங்க.

சொல்றேன். அதவிட எதையெல்லாம் மறச்சுட்டாங்கங்குறதையும் சொல்றேன் கேளுங்க. தவ்ஹீது பிரச்சாரத்துல மும்முரமா ஈடுபட்டுகிட்டு இருந்தப்போ, எதுத்து வந்தவங்க அடிச்சதுல பல்லுப் போச்சே. அந்த மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி பத்தி ஒண்ணுமே எளுதல.

அதுதான் அவரு சீடரு அதிர பாருக்கு.. .. பல்லுப்போயி சொல்லுப் போன மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதின்னு ஒரு கட்டுரைல எழுதியிருந்தாரே.

பாவம் அந்த அதிரை, என்ன செய்வாரு? தலைவர் பாணியில எதுகை மோனையோட எழுதுறதா நெனெச்சு எளுதியிருப்பாரு. தவ்ஹீதுக்காகத்தான் பல்லுப் போச்சுங்குற வெவரம் அவருக்கு எங்க தெரிஞ்சுருக்கப் போவுது. அத தவிர, ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி என்ன தலைவர மாதிரி கருப்பு சாயத்த அள்ளி அப்பிக்கிட்டா வந்து நிக்குறாரு. அதுனால அதிரை அப்புடி எளுதியிருப்பாரு விடுங்க.

சரி விட்டுடுவோம். நீங்க தொடருங்க.

இம்தாதி மட்டுமில்ல, இந்த பிஜே சொன்னாருங்குறதுக்காக உண்மையான தவ்ஹீத்வாதிகளான JAQH ஆளுங்களோட மல்லுக்கட்டி, திருச்சி சிங்காரத் தோப்பு பள்ளிய PJ வுக்கு வாங்கிக் குடுத்தாரே. அந்த அலி அக்பர் உமரியப் பத்தியும் ஒண்ணும் எளுதல.


அடப்பாவமே. தவ்ஹீது பிரச்சாரத்துக்காக ஊரு ஊரா சுத்துனவராச்சே அவரு. தவிர இன்னைக்கு வரைக்கும் வீரியமான தவ்ஹீது பிரச்சாரத்துல தான ஈடுபட்டுக்கிட்டு இருக்காரு, பஹ்ரைன், குவைத், சவுதின்னு பல பகுதிகள்ல்ல அவரு போயி பிரச்சாரம் பண்ணுனதா சொன்னாங்களே. அந்த அலி அக்பர் உமரியவே விட்டுட்டாரா. அப்போ ஆத்தங்கர அலாவுதீன் பாகவிய பத்தியும் ஒண்ணுமே சொல்லலியா.

அட என்னங்க அஹமது. இஸ்லாமிய பிரச்சார மையங்கள்ல்ல அதிகாரப்பூர்வமான அழைப்பாளர்களா இருக்குற மவ்லவிகளையே கண்டுக்காம மறைச்சவரு, ஒரு கிராமத்துல இருந்தாலும் அழைப்புப் பணிக்காக தன்னோட ஓய்வு நேரத்த முழுமையாக செலவழிக்கிற அலாவுதீன் பாகவியப் பத்தியா சொல்லப்போறாரு.

ஒமர் பாய் அலாவுதீன் பாகவின்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. நம்மள்ட்ட ஒரு அற்புத அலாவுதீன் இருந்தாரே. அவரு எங்க போனாரு. மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளரா கூட வரலியே.

என்ன அஹமது. புரியாத மாதிரி கேக்குறீங்க. டிவி சீரியல்ல நல்லா நடிக்காதவங்கள ஓரம் கட்டிட்டு நல்லா நடிக்கிறவுங்களத் தான போடுவாங்க. அத மாதிரி நம்ம அண்ணனோட மெகா சீரியல்ல அற்புத நடிகர் அலாவுதீனுக்கு ஓய்வு குடுத்துட்டு புதுப்புது நடிகர்கள எறக்கிட்டாங்கள்ல்ல.

அதுவுஞ் சரிதான். மெகா சீரியல் ரேஞ்சுக்குத்தான் இங்க பணிகள் நடக்குது. ஆமா இந்த மாநாட்டு விஷயங்களுக்கு டிவில ஒருத்தரு வந்து சாட்சி சொன்னாராமே.

அது ஒரு பெருங்கூத்து. கடைசில வேலிக்கு ஓணான் சாட்சிங்குற மாதிரி அது ஆகிப்போச்சு.

என்ன ஒமர் பாய், நடந்தது என்னன்னு கேட்டா பழமொழிய சொல்லிக்கிட்டு இருக்கீங்க.

அதாவது அஹமது, வேலி எவ்வளவு பலமானதுன்னு அத பொத்துக்கிட்டு வந்த ஓணான் சாட்சி சொன்னதா சொல்லுவாங்கள்ல்ல, அந்த கதயா, இவுங்களோட டிவில சம்பளம் வாங்குற ஒருத்தர புடிச்சுகிட்டு வந்து சாட்சி சொல்லச் சொன்னா, இவுங்களோட செயல்பாடுகள் சரியில்லண்ணா சொல்லுவாரு. தவிர அங்க அண்ணனும் பாக்கரும் போட்டிருந்த ஸ்டால்ல வித்த சிடி கள்ல்ல இவரு தான் வாய்ஸ் டப்பிங் பண்ணுனாராம்.

அதுசரி, பங்காளி சாட்சி சொல்லக் கூடாதுன்னு இஸ்லாமிய ஷரீஅத் சொல்லுதே. பங்காளின்னா சொந்தக்காரன் மட்டும் தான் இவரு போல பிஸினஸ் பங்காளி இல்லன்னு சொல்லி சமாளிப்பாரோ.

இந்த மாதிரி இஸ்லாமிய ஷரீஅத் பத்தியோ, உண்மையான தவ்ஹீதப் பத்தியோ யோசிக்காத கூட்டத்தத் தானே நம்ம அண்ணன் உருவாக்கிக்கிட்டு வற்றாரு. அவரு எளுதுன தர்ஜுமாவுக்கு T.ராஜேந்தர வச்சு வெளம்பரப்படுத்துனா மாதிரி, இப்போ T.S.S.மணிய வச்சு விளக்கம் குடுத்தாரோ என்னவோ.

அப்புடி என்னதான் சொன்னாரு அந்த மணி. அதத்தான் சொல்லுங்களேன்.
இவுங்க அவர வச்சு, அங்க ரொம்ப கூட்டமா இருந்துச்சுன்னு சொல்ல வக்க நெனச்சாங்க போல இருக்கு. ஆனா அவரு வந்து ஒக்காந்துகிட்டு, அங்க சுமாரா ஒரு 50 ஆயிரம் பேரு வந்திருப்பாங்ளான்னு – கேட்டு ஆரம்பிச்சு வைச்சதோட, நம்மாளு பதறிகிட்டு, நாம சேர் போட்டதுனால 60 இல இருந்து 70 னாயிரம் பேரு இருந்திருப்பாங்க. சேர் போடலைன்னா கொறஞ்சது ஒண்ணறை இலட்சம் பேரு அங்க இருந்திருக்க முடியும்னு வாக்கு மூலம் குடுத்தாரு.

அடக்கண்றாவியே, அப்போ 10 இலட்சம்னு டெய்லி கூவுனதுலாம் வெறும் நாடக வசனமாகவுல போச்சு. 1 இலட்சம் பேருக்கு கூட உக்கார வசதி செய்யலன்னா, அதுல எத்தனை பேருக்கு மத்த வசதிகள செஞ்சிருப்பாங்க. ஆக மொத்தம் அவுங்க சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லைன்னு நிரூபிச்சுட்டாங்க போங்க.

சரியாச் சொன்னீங்க அஹமது. இரண்டு பேருமே BJP அதாவது பாக்கரும், இன்று மாறிப்போன பிஜேவும் அவுங்க சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லைன்னு பல முறை நிரூபிச்சுட்டாங்க. இத வெளங்குன நீங்களும் நானும் இப்போ அதப்பத்தி கவலப்பட்டுகிட்டு இருக்கோம். அத வெளங்காத கூட்டமாப் பாத்து மேடையேத்தி வச்சு, குளுப்பாட்டி, புதிய வசூல் ராஜாக்கள் ஆக்கி வச்சுருக்காரு.

ஒமர் பாய் கொஞ்சம் வெளக்கமாத்தான் சொல்லுங்களேன்.

அஹமது.. .. ..
அவரு தவ்ஹீதுன்னு சொன்னத நம்புனோம், ஆனா அது உண்மையான தக்லீதாப் போச்சு. அவரு பாக்கரு மேல பாலியல் குற்றச்சாட்டு சொன்னத நம்புனோம். ஆனா பாக்கரு மிரட்டுனவுடன அத புஸ்வானமாக்கிட்டு பாக்கருக்கே அதிகப்படியான பொறுப்ப குடுத்து நம்மள முட்டாளாக்கிட்டாரு. கும்பமேளாவுல 10 இலட்சம் பேரு கூடுனாங்கன்னு அடிச்சுச் சொன்னாரு. பல பேரு நம்பளன்னாலும் ஒங்களயும், என்னையும் மாதிரி சில பேரு நம்புனோம். ஆனா ஜெயலலிதா கிட்ட போனவுடன ஒரு இலட்சம் பேருன்னு பம்மிப் போயிட்டாரு.
அதே மாதிரி தான் ஜகாத்து, குர்ஆன் தர்ஜுமா, ஸஹாபாக்கள் பத்துன விமரிசனம்னு அவரு சொன்னத நம்புனோம். ஆனா கடைசில தான் அவரோட திருகுதாளம்லாம் வெளங்குச்சு. அதமாதிரி தான் இந்த வல்லம் கூத்தும், 10 இலட்சம் பேரு, 100 ஏக்கரு, ஐஎஸ்ஓ தரத்துல ஏற்பாடுன்னு சொன்னாரு, தவ்ஹீது பிரச்சாரத்துக்காக இல்லாட்டாலும், இந்த 100 ஏக்கர்ல நடக்குற பொருட்காட்சியாவது பாத்து வரலாம்னு, சித்திர திருவிழா, கந்தூரி சந்தனக்கூட்டுக்கு போற மாதிரி கூட்டம் கொஞ்சம் பேரு வந்தாங்க. இதுலயும் தான் சொல்றதுக்கும், யதார்த்தத்துக்கும் சம்பந்தமேயில்லைனு நிரூபிச்சுட்டாரு.

ஒமர் பாய், இது தான் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குங்குற கதயா ஒவ்வொன்னா வெளுத்துப் போச்சே, நான் கேட்டது இதயில்ல. புது வசூல் ராஜாக்கள்னு சொன்னீங்களே, அந்த வௌரத்த சொல்லுங்க.

ஓ. அதக்கேட்டீங்களா. அஹமது.. .. .. தமுமுக நடத்துன நன்றி அறிவிப்பு மாநாட்டுல இயக்கத்துக்காக பாடுபட்ட பல சகோதரர்கள புறக்கணிச்சுட்டு, காசு குடுப்பாங்கங்குற எதிர்பார்ப்புல சில தொழிலதிபர்கள மேடையேத்தி வச்சுக்கிட்டாங்கன்னு புளுதி வாரி தூத்துனாரே ஞாபகம் இருக்கா.

நல்லா ஞாபகம் இருக்கு. சொல்லுங்க. ஆனா அன்னைக்கு இவரு சொல்ற யாருமே மேடைல கிடையாது. எல்லோருமே மேடைக்கு கீழ தான ஒக்காந்து இருந்தாங்க.

சரியாச் சொன்னீங்க. கீழ இருந்தவங்க முதலமைச்சருக்கு மரியாதை செலுத்துறதுக்காக மேடைல ஏறி எறங்குனதயே விமரிசிச்ச இவரு, தவ்ஹீது மேடைல எத்தி வச்சிருந்தது யாரண்ணு தெரியுமா. இங்க தமிழகத்துல தவ்ஹீதுனுடைய ஆரம்ப காலகட்டத்துல இருந்து அதாவது சரியாச் சொல்லணும்னா இந்த பிஜே, ஜாக்கில் இருந்தப்போ ஜாக்குலேயும், அத வுட்டுட்டு தமுமுகவுக்கு போனப்போ அங்கேயும் அங்க இருந்துக்கிட்டே அனைத்து தவ்ஹீது கூட்டமைப்புன்னு ஆரம்பிச்சப்போ அதுலயும், பெறகு அதே பேர ததஜன்னு மாத்திக்கிட்டாரே அப்பவும் கூடவே இருந்தாங்களே அவுங்கள்ல்ல யாரையும் மேடையேத்தல. மாத்தமா 2004ல தமுமுகவுல இருந்து ஓடுனாரே அப்போ, கல்ஃப்ல இருந்து ஏஜெண்டா வேல செஞ்சு காசு வசூல் பண்ணி அனுப்புனாங்களே அந்த வசூல் ராஜாக்களத்தான் அமர்வு தலைவரா உக்காரவச்சு அளகு பாத்தாரு.

அடக்கஷ்ட காலமே, அப்போ காசு குடுத்தா ததஜவுல தலைவர் போஸ்ட தவிர எதயும் வாங்கிடலாம் போல. சரி வேற ஒண்ணும் வல்லத்தப் பத்துன சேதி இல்லையா.

ஏன் இல்லாம. அது கெடக்கு வண்டி வண்டியா. எல்லாத்தையும் இப்பவே சொல்ல முடியாட்டியும், கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்றேன், கேளுங்க.

என்னா, ரொம்ப செலவாயிடுச்சு. துண்டு வுளுந்துருச்சு. அதுனால காசு குடுங்கன்னு கேப்பீங்க. அது தான.

பரவாயில்லையே. நீங்க சொல்றது ஓரளவுக்கு சரிதான். அதாவது செலவாயிடுச்சு. துண்டு வுளுந்துருச்சுன்னு சொன்னாங்க. கூடவே இண்ணொன்னும் சொன்னாங்க பாருங்க. அதுதான் படா தமாசு.

அதச் சொல்லுங்க மொதல்ல.

அதாவது அஹமது, நான் என்னோட வார்த்தைல சொல்றத விட பாக்கர் சொன்னத அப்படியே சொல்றேன் கேளுங்க. அதாவதுமா, இரண்டாம் நாள் மீட்டிங்லாம் முடிஞ்சு போச்சு. கூட்டம்லாம் போயிகிட்டு இருக்கு. சுபுஹானகல்லாஹும்ம சொல்லியாச்சு. அப்பத்தான் ஒருத்தரு சொல்றாரு, இவ்வளவு பேரு வந்துட்டுப் போறாங்களே. ஒரு உண்டியல் வச்சுருந்தா கொஞ்சம் வசூலாவது ஆகி இருக்குமே. சமாளிச்சுக்கலாமேன்னு சொல்றாரு. மனசே இல்லாம அங்க கெடந்த பக்கெட்ட தூக்கி அனுப்புறேன். மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். பாதிக்கூட்டம் போனபொறவு கூட முத ரவுண்டு கலெக்ஷன்ல 5 இலட்சம் ரூபாயும், இரண்டாம் ரவுண்டு கலெக்ஷன்ல 4 இலட்ச ரூபாயும் கெடச்சுது – அப்புடீன்னு பாக்கரு டிவில சொல்றாருங்க.

ஆஹா பரவாயில்லையே. படு பயங்கர கலெக்ஷனா இருக்கே. இது தவிர கடையநல்லூர் மஜீதுங்குறவரு மட்டுமே தன்னோட உள்ளூர் வசூல் 3 இலட்சம்னும், வெளிநாட்டுல உள்ள கடையநல்லூர் காரங்க மூலமாக வசூல் 13 இலட்சம்னும் எளுதியிருக்காரே பாத்தீங்களா.

ஆமா. இப்புடி எல்லாத்தையும் கூட்டிப்பாத்தா பல கோடிகள் வரும் போல இருக்கே. ஆனா இந்த கடைசி நாள்ல்ல இரண்டு ரவுண்டு வசூல்ல 9 லட்சம் கெடச்சுதுன்னு சொல்றது ஓவர் பிலட் அப் மாதிரி தெரியுது. உண்மையான வெபரம் தெரியணும்னா இந்த மாநாட்டு வசூல் சம்பந்தமான வெள்ளை அறிக்கைய பிஜேபியில யாராவது அதாவது பாக்கரோ அல்லது மாறிப் போன பிஜே வோ வெளியிடாம ஒருத்தருக்கும் தெரியாது. அல்லது முன்னால ஜெயலலிதாகிட்ட வாங்குனதா சொன்னாங்களே அந்த கோடிகளுக்கு கணக்கு காட்ட இப்புடி சொல்றாங்களோ என்னவோ. ஒண்ணும் புரியல.

வருத்தப்படாதீங்க ஒமர் பாய். 2000 ல நடந்த மாநாட்டு வரசு செலவு கணக்கு கேக்கப்போயி தான் ஒருத்தருக்கு திருட்டுப் பட்டமும், மனநோயாளி பட்டமும் கெடச்சுது. இந்த வல்லத்துல எத்தனை பேரு கரைசேரப் போறாங்களோ அல்லது எத்தனை பேத்த கவுக்கப் போறாங்களோ. நீங்க சும்மா இருங்க. இல்லண்ணா உங்க பேரையும் அண்ணன் சமூக விரோதிகள் பட்டியல்ல சேர்த்துடப் போறாரு.

அதுவும் சரிதான் அஹமது. சமூக விரோதிகள் பட்டியல் சம்பந்தமாவும் சில விஷயங்கள் பேசிக்கிடணும். ஆனா டயம் இல்ல. இன்ஷா அல்லாஹ் பிறகு சந்திக்கும் போது சொல்றேன். வரட்டுமா. வஸ்ஸலாம்.

முல்லா 23.05.2008 ::: Thanks- Muthupettai